பெண்களுக்கு ஒரு அக்குபஞ்சர் புள்ளி


பெண்களுக்கு ஒரு அக்குபஞ்சர் புள்ளி. இந்திய அக்குபங்சரின் தந்தை டாக்டர் ஃப்ஸ்லூர் ரஹ்மான் MBBS DV MD Phd (Acu) அவர்கள் பரிந்துரைத்த இந்த அக்குபஞ்சர் புள்ளி. பெண்களின் 90% உடல் தொந்தரவுகளை நீக்கக்கூடியது. பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் இந்த புள்ளி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். “பெண்களே உங்களுக்காக! (நிச்சயமாக ஆண்களுக்கும்), என்ற புத்தகத்தில் அவர் இதை குறிப்பிடுகிறார். அருமையான புத்தகம் அனைவரும் கண்டிப்பாக வாங்கி படித்துப்பாருங்கள்.

இந்த அக்குபஞ்சர் புள்ளியின் குணங்கள்

1. மண்ணீரல் மற்றும் வயிற்றை பலப்படுத்தும், தொந்தரவுகளை நீக்கும்.

2. கர்ப்பப்பை மற்றும் மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும்

3. வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறை குணமாக்கும்.

4. கர்ப்பப்பை மற்றும் மார்பக கட்டிகள் குணமாக்கும்

5. கர்ப்பப்பை மற்றும் மார்பகம் தொடர்புடைய இதர கோளாறுகளும் குணமாகும்

6. ஊளைச்சதை குறையும், உடல் பருமன் ஆவதைத் தடுக்கும்

7. நீரிழிவு நோயை குணமாக்கும்

8. நுரையீரல் கோளாறுகளை நீக்கும்

ஆண்களுக்கும், பெண்களுக்கும் மேலும் பல உடல் உபாதைகளை குணமாக்க வல்லது இந்த CV13 என்ற கர்ப்ப சக்தி நாளத்தின் பதிமூன்றாவது புள்ளி.

இந்தப் புள்ளியை வாரம் ஒருமுறை மசாஜ் செய்து வந்தால் எதிர்காலத்தில் எந்த உடல் தொந்தரவும் இல்லாமல் வாழலாம். தற்போது என்ன உடல் தொந்தரவுகள் இருந்தாலும் அதை கட்டுக்குள் கொண்டுவந்து குணப்படுத்தலாம்.


CV13 அக்குபஞ்சர் புள்ளியின் அமைவிடம்


CV13 என்ற கர்ப்ப சக்தி நாளத்தின் பதிமூன்றாவது புள்ளி, மனித உடலின் தொப்புள், நெஞ்சு, மற்றும் மூக்கின் நேர்கோட்டில்; தொப்புளில் இருந்து ஐந்து அங்குலம் மேலே அமைந்துள்ளது.


அங்குலம் கணக்கு 



விரல் நுனியில் இருந்து முதல் கோடுவரை ஒரு அங்குலம் ஆகும். உங்கள் ஆள்காட்டி விரலில் உள்ள மூன்று கோடுகள் மூன்று அங்குலம் ஆகும். ஒவ்வொருவருக்கும் அவர் அவர் ஆட்காட்டி விரல் அளவே பொருந்தும்.

படுத்துக்கொண்டு, உங்கள் ஆள்காட்டி விரலைக் கொண்டு அளந்து புள்ளியை கண்டுபிடியுங்கள். அளவு தொப்புளின் நடுப்புள்ளியில் தொடங்க வேண்டும்.


மசாஜ் செய்யும் முறை

1. முதலில் அந்த புள்ளியை லேசாக உங்கள் ஆள்காட்டி விரலால் தொடுங்கள்.

2. பின்னர் லேசாக அந்தப் பள்ளிக்கு அழுத்தம் கொடுங்கள், உங்கள் ஆள்காட்டி விரலின் அரை அங்குலம் தோலின் உள்ளே செல்லும் அளவுக்கு அழுத்தம் கொடுங்கள்.

3. அடுத்தது தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் அழுத்தம் கொடுங்கள்.


மசாஜ் செய்யும் காலம்

1. உடலில் தொந்தரவுகள் உள்ளவர்கள், ஒரு நாளைக்கு இரு முறை என, காலைக் கண் விழித்த உடனும், இரவு தூங்கும் முன்பும். தொடர்ச்சியாக மூன்று நாளைக்குச் செய்ய வேண்டும். பின்பு வாரம் ஒரு முறை மசாஜ் செய்ய வேண்டும்.

2. உடலில் எந்தத் தொந்தரவும் இல்லாதவர்கள் வாரம் ஒரு முறை, இரவில் செய்தால் போது. பிற்காலத்தில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் வாழலாம்.

இந்தக் கட்டுரையை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள், பெண்கள் அனுபவிக்கும் எல்லாத் தொந்தரவுகளில் இருந்து, உடல் உபாதைகளில் இருந்து விடுதலைத் தரக்கூடியது இந்த அக்குபஞ்சர் புள்ளி.


Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top