நோய் கண்டவர்களுடன் சில அனுபவங்கள் - 2
அனுபவம்
0
Comments
நோய் கண்டவர்களுடன் சில அனுபவங்கள்- சம்பவம் 1
என் நண்பனின் மாமா ஒருவருக்கு சர்க்கரை வியாதி, அவர் காலில் புண்கள் ஏற்பட்டுவிட்டன. அந்த புண்களுக்கும், நீரிழிவு நோய்க்கும் அவர் மருந்து மாத்திரைகளை உட்கொண்டு கொண்டிருந்தார். அவரை சந்தித்த நான் அவருக்குத் தொடு சிகிச்சை செய்து, மருந்து மாத்திரைகளை நிறுத்திவிடுங்கள், பசித்தால் மட்டும் சாப்பிடுங்கள், புண்கள் குணமாகிவிடும், நீரிழிவு நோயும் குணமாகும் என்று கூறினேன். ஒரு வாரம் கழித்து மீண்டும் வைத்தியத்துக்கு வாருங்கள் என்று கூறி அனுப்பினேன்.
ஆறு மாதங்கள் கடந்தும் அவர் மீண்டும் வைத்தியத்துக்கு வரவில்லை, நானும் கண்டுகொள்ளவில்லை. ஆறு மாதம் கழித்து என் நண்பரைச் சந்தித்த போது கேட்டேன் “உங்கள் மாமா எப்படி இருக்கிறார்? ஏன் மீண்டும் வைத்தியத்துக்கு வரவில்லை?” என்று அவர் கூறினார் “உங்கள் வைத்தியத்தை அவர் நம்பவில்லை, நீங்கள் சொன்ன எதையுமே அவர் பின்பற்றவில்லை, என் மாமாவின் புண்கள் ஆறாமல் புண்கள் மேலும் மோசமாகி, காலை வெட்டி எடுத்துவிட்டார்கள்”, என்று.
வாசகர்களாகிய நீங்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு புண்ணைக்கூட ஆற்றத் தெரியாத ஒரு மருத்துவத்தை அவர் நம்புகிறார். ஆனால் ஒரு மருந்து மாத்திரையும் இல்லாமல் உன் புண் மட்டுமல்ல, நீரிழிவு நோயையும் சேர்த்துக் குணப்படுத்துகிறேன் என்று சொன்ன என்னை நம்பவில்லை. இங்கே தவறு யாருடையது? மருத்துவருடையதா? நோயாளியுடையதா?
தவறு நோயாளியுடையது தான், தனக்கு எது சிறந்தது என்று தேர்ந்தெடுக்கும் அடிப்படை அறிவு கூட இல்லாதது அவரின் தவறுதான்.

Post a Comment