அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் வழிமுறை

 

இயற்கையின் ஆற்றலைக் கொண்டு உடலின் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் வழிமுறை. ஒரு மனிதனின் உடலிலோ மனத்திலோ ஏதேனும் பாதிப்பு உருவாவதற்கு இரண்டே காரணங்கள் தான் இருக்கும் ஒன்று உடலிலோ மனதிலோ கழிவு தேக்கம் ஏற்பட்டிருக்கும் அல்லது உடலிலோ மனதிலோ சக்தி பற்றக் குறை ஏற்பட்டிருக்கும்.

இந்த உலகம் முழுவதும் பிரபஞ்சத்தின் படைப்பாற்றல் நிறைந்து இருக்கிறது. சில இடங்களில் அந்த பிரபஞ்ச பேராற்றல் அதிகமாக இருக்கிறது, அந்த இடங்களில் இருக்கும் பிரபஞ்ச சக்திகளைக் கொண்டு எல்லா உடல் மற்றும் மனதின் நோய்களையும் பாதிப்புகளையும் குணப்படுத்திவிட முடியும்.

பிரபஞ்ச சக்தி அதிகமாக இறங்கும் நேரங்களிலும், அதிகமாக இருக்கும் இடங்களிலும் உடலுக்குள் செல்லும் அளவுக்கு தடையில்லாமல் அதனுடன் தொடர்பு கொள்ளும் போது. பிரபஞ்ச சக்தியானது உடலுக்கும் கிரகிக்கப்பட்டு மனிதனின் அனைத்து நோய்களையும் தீர்க்கவல்லது.


பிரபஞ்ச பேரோட்டலை கிரகிக்கும் வழிமுறைகள்

  1. மழையில் நனைதல்
  2. குளம் ஆறு போன்றவற்றில் குளித்தல்.
  3. கடலில் குளித்தல்
  4. புல்வெளியில் காலில் செருப்பின்றி நடத்தல்
  5. மலை, மாற்றும் குன்றுகளில் காலில் செருப்பின்றி நடத்தல்
  6. கடல், ஆற்று மணலில் காலில் செருப்பின்றி நடத்தல்
  7. நிலா வெளிச்சத்தில் காய்தல்
  8. சூரிய வெளிச்சத்தில் காய்தல் 

பிரபஞ்ச பேராற்றலின் இயக்கத்தை உணர்ந்ததால்தான் நம் முன்னோர்கள், கோயில், கொண்டாட்டம், திருவிழா, போன்றவற்றை ஆறு, குளம், கடல், மலை உள்ள பகுதிகளில் உருவாக்கினார்கள். அங்குக் காலில் செருப்பு இல்லாமலும், ஆண்கள் சட்டை இல்லாமலும் வரச் சொன்னார்கள்.

பிரபஞ்ச சக்தி உடலுக்குள் செல்லும் போது உடலின், மனதின் கழிவுகள் நீங்கும், நோய்கள் குணமாகும்.


Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top