காதலோ காமமோ
காதல் கவிதை
0
Comments
காதலோ காமமோ
உனக்காக ஒரு உயிர்
பிரிந்தது
உன் தேநீர்க்
கோப்பையில் ஒரு
ஈயின் மரணம்
உன் அழகில்
மயங்கி விழுந்ததோ
உன் எச்சில் ருசிக்கண்டு
மூர்ச்சையானதோ
இறைவனுக்குத்தான்
வெளிச்சம்
எனக்கு அந்த ஈயின் மீது
கொஞ்சம் பொறாமை
எனக்கு முன் உன்
இதழ் சுவைக் கண்டதே
உன் இதழின்
சுவைக் கண்டால் நானும்
மூர்ச்சையாவேனோ

Post a Comment