கால் மரத்துப் போவதும் புண் உண்டாவதும் ஏன்?

 

சர்க்கரை நோயாளிக்கு கால் மரத்துப் போவதும் புண் உண்டாவதும் ஏன்? உடலைப் பற்றிய ஒரு உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள். ஒரு நபருக்கு உடலில் வலிகள் இருக்கும் வரையில் உடலுக்கு பெரிய அளவில் ஆபத்து ஏதுமில்லை ஆனால் உடலின் வலிகளை மருந்து மாத்திரைகளைக் கொண்டு கட்டுப்படுத்திய பின்னர்தான் உண்மையான ஆபத்து தொடங்குகிறது.

உடலின் ஏதாவது ஒரு பகுதியில் வலி உண்டானால், ஏதோ ஒரு புதிய நோய் உருவாகிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தமில்லை. மாறாக வலி ஏற்படும் பகுதியில் நோய் குணப்படுத்தும் வேலை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என்று அர்த்தம். இந்த உண்மையை ஆராய சர்க்கரை நோயாளிகளை எடுத்துக்காட்டாகப் பார்க்கலாம்.

தவறான உணவு முறையினாலும் தவறான வாழ்க்கை முறைகளினாலும் உடலில் கெட்ட சர்க்கரை உருவாகவும், தேங்கவும் தொடங்குகிறது. உடலில் உருவாகும் கெட்ட சர்க்கரை பெரும்பாலும் சிறுநீர் மூலமாகவே வெளியேறிவிடும். ஆனால் சர்க்கரை நோயைக் குணப்படுத்துகிறேன் என்ற பெயரில் மருந்து மாத்திரைகளை உட்கொள்ளும் போது; கெட்ட சர்க்கரை உடலில் இருந்து வெளியேற முடியாமல் உடலின் உள்ளேயே தேங்கத் தொடங்கும்.

கெட்ட சர்க்கரை எந்த உறுப்பில் அதிகமாக சேருகிறதோ, அந்த உறுப்பைப் பாதித்து, அதை பழுதாக்கிவிடும். இரத்தத்தில் சுழன்று கொண்டிருக்கும் கெட்ட சர்க்கரை, புவியீர்ப்பு விசையின் காரணமாக கால் பாதங்களில் அதிகமாகச் சேரும். மருந்து மாத்திரைகள் சாப்பிட்டதால் தான் கெட்ட சர்க்கரை உடலிலேயே தேங்கி கால்களில் புண்களும், வலிகளும் உருவாகின்றன என்பதை உணராமல். வலி உண்டானவுடன் மீண்டும் மருத்துவரையே நாடி, வலியைக் கட்டுப்படுத்த இன்னும் அதிகமான மருந்து மாத்திரைகளை உட்கொள்ளத் தொடங்குவார்கள்.

இப்போது என்ன நடக்கும் என்றால் உடலில் தேங்கியிருக்கும், இரசாயனங்களும், கழிவுகளும் காலில் ஒரு துளையிட்டு புண்ணாகி உடலிலிருந்து வெளியேற முயற்சி செய்யும். அந்த புண்ணையும் மருந்து மாத்திரைகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தும் போது, கால்கள் மரத்துப் போகும், பல வேளைகளில் கால் அழுகத் தொடங்கும். கால் விரல்கள் அழுகி விழுவதுக் கூட பலருக்கு தெரிவதில்லை. சில நோயாளிகளுக்கு கால் இருக்கிறது என்ற உணர்வு கூட இருக்காது.

வலி உண்டான போது அச்சம் கொண்ட நோயாளிகள் வலி மறைந்து கால்கள் மரத்துப் போன பிறகு அச்சத்தை விட்டு ஏதோ நோய் குணமாகி விட்டதைப் போன்று கற்பனை செய்யத் தொடங்குகிறார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு கால்கள் மரத்துப் போவதும் உணர்ச்சிகள் இல்லாமல் போவதும் ஒரு ஆபத்தான அறிகுறியாகும். இதற்குப் பின்புதான் அவர்களுக்கு கால்கள் அழுகத் தொடங்கும், புண்களும் பெரிதாகத் தொடங்கும்.

நான் எதற்காக இவற்றை விவரமாக கூறிக் கொண்டிருக்கிறேன் என்றால் சர்க்கரை நோயாளிகளின் கால்களில் புண்கள் உருவாவதற்கும், கால்கள் அழுகுவதற்கும் இரசாயன மருந்து மாத்திரைகள் தான் முக்கிய காரணம். ஒருவேளை பல வருடங்களாக மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்களுக்கு கால்களில் திடீரென புண் தோன்றினால் அல்லது வலி உருவானால் அச்சம் கொண்டு அதை கட்டுப்படுத்த மருந்து மாத்திரைகளை நாடாதீர்கள். வாழ்க்கை முறைகளையும், உணவு முறைகளையும் மாற்றுங்கள். உங்கள் உடலை நம்புங்கள்.

காலில் உண்டான புண்ணின் வழியாக உடலில் சேர்ந்திருக்கும் இரசாயனங்களும், கழிவுகளும், கெட்ட சர்க்கரைகளும், வெளியேறிவிடும். அதன் பின்பாக உடல் சுயமாக அந்தப் புண்ணை ஆற்றி மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்துவிடும்.

தாயின் கருவறையில் எந்த ஒரு முன்மாதிரி இன்றி உங்கள் உடலை உருவாக்கியது உங்களின் இயக்கச் சக்திதானே? அந்தச் சக்திக்கு உடலில் ஒரு குறைபாடு ஏற்படும்போது அதை சரிசெய்துகொள்ளத் தெரியாதா? சிந்தித்துப் பாருங்கள்.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top