நோயும் மருத்துவமும்


நோயும் மருத்துவமும். நமது அன்றாட அலுவல்களைச் செய்யவிடாமல் உடலையோ மனதையோ முடக்கிப்போடும் அனைத்தையும் நோய் என்று அழைக்கிறோம்.

நோய்கள் எவ்வாறு உருவாகின்றன?

நம் உடலின் செயல்திறன் முழுமையாக இல்லாத போதும், கழிவுகள் முழுமையாக வெளியேறாமல் உடலின் உள்ளேயே தேங்கும் போதும், கழிவுகள் தேங்கும் உறுப்பில் நோய்கள் உற்பத்தி ஆகின்றன.

எது உண்மையான மருத்துவம்?

உடலின் செயல்திறனை அதிகரிப்பதும், உடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை முழுமையாக வெளியேற்றுவதும், இதற்கப்புறம் புதிய கழிவுகள் தேங்காமல் தடுப்பதும், மட்டுமே உண்மையான மருத்துவமாகும்.

இந்த வழிமுறையில் மருத்துவம் செய்யும்; அதாவது நாடிப் பார்த்து, நோயறிந்து, நோயின் காரணம் அறிந்து, உடலின் சக்தி நிலையை அதிகரித்து, உடலில் தேங்கி இருக்கும் கழிவுகளை வெளியேற்றக் கூடிய மருத்துவத்தை மட்டுமே நாடுங்கள். இதுவே உங்களுக்குச் சிறப்பானதாகும். இந்த வழிமுறை மட்டுமே நோய்களில் இருந்தும், உடல் உபாதைகளில் இருந்தும் உங்களுக்கு நிரந்தர தீர்வைத் தரும்.

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top