ஆன்டிபயாட்டிக் மருந்தும் விசித்திர மனிதரும் - 2


அவர் உடலுக்குள் செலுத்திக் கொண்ட ஆண்டிபயாடிக் ஊசிகள், அவர் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை சிதைந்து, நரம்புகளைச் சிதைத்து, நரம்பு மண்டலத்தில் உண்டான பாதிப்பால் தலை கழுத்தில் நிற்காமல் தொங்குகிறது. ஆண்டிபயாடிக் மருந்துகளின் பக்க விளைவுகளுக்கு இவர் ஒரு உதாரணம்.

ஆண்டிபயாடிக் மருந்து (Antibiotic) என்பது என்ன? ஆண்டிபயாடிக் மருந்துக்கு விக்கிப்பீடியா (wikipedia) இணையத்தளம் கொடுக்கும் விளக்கம்.
 
“An antibiotic is a type of antimicrobial substance active against bacteria. It is the most important type of antibacterial agent for fighting bacterial infections, and antibiotic medications are widely used in the treatment and prevention of such infections.”

சுருக்கமாகச் சொல்வதானால் ஆண்டிபயாடிக் மருந்து என்பது உடலில் உள்ள நுண்ணுயிரிகளைக் கொல்வதற்கான மருந்து (விஷம்). மனித உடலில் நோய்கள் உருவாக நுண்ணுயிரிகள் காரணமாக இருக்கின்றன என்ற ஆங்கில மருத்துவத்தின் தவறான நம்பிக்கையின் காரணமாக, செடிகளுக்கு அடிக்கும் களைக்கொல்லிகளைப் போன்று இந்த மருந்து வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. 


மாத்திரை அல்லது ஊசி வடிவில் செலுத்தப்படும் இவ்வகையான மருந்துகளுக்கு சிந்தனை ஆற்றல் இருக்குமா? எது சரி எது தவறு என்று தெரியுமா? எவையெல்லாம் நல்ல நுண்ணுயிர்கள், எவையெல்லாம் தீய நுண்ணுயிர்கள் என்பது தெரியுமா? நுண்ணுயிர்களைக் கொல்லப் பயன்படும் இவ்வகையான மருந்துகள் நோய்களை உருவாக்கும் நுண்ணுயிர்களை மட்டும் தேடிக் தேடிக் கொல்லுமா?, அல்லது உடலில் இருக்கும் அனைத்து வகையான நுண்ணுயிரிகளையும் கொல்லுமா? 

தொடரும்…

Post a Comment

Hey, if you've got any thoughts or ideas about this article, hit us up in the comments! We'd love to hear what you think.

To Top