குழந்தைகளை விரைவாக சாப்பிடச் சொல்லக் கூடாது

குழந்தைகளை விரைவாக சாப்பிடச் சொல்லக் கூடாது, சாப்பிடச் சொல்லி வற்புறுத்தக் கூடாது. மாறாக பிள்ளைகளுக்கு பொறுமையாகவும் நிதானமாகவும் உணவை மென்று விழுங்க பெற்றோர்கள் கற்றுத்தர வேண்டும்.

பொறுமையாகவும் நிதானமாகவும் மென்று விழுங்கப்படும் உணவு மட்டுமே முழுமையாக ஜீரணமாகும், உடலுக்குத் தேவையான சக்தியாக மாறும், உணவின் கழிவுகளும் முழுமையாக உடலில் இருந்து வெளியேறும்.

உணவை பொறுமையாக மென்று விழுங்கினால்தான் பிள்ளைகள் நோய்கள் அண்டாமல் இறுதிவரையில் ஆரோக்கியமாக வாழ்வார்கள்.

To Top