யார் நமது முன்னோர்கள்?
யார் நமது முன்னோர்கள்? முன்னோர்கள் என்ற சொல் நமக்கு முன்பாக வாழ்ந்தவர்களைக் குறிக்கவில்லை. அதாவது முன்னோர்கள் என்ற சொல் நமது, தாத்தா, பாட்டி, பாட்டன், பூட்டன் போன்றவர்களைக் குறிக்கவில்லை, மாறாக முன்னோர்கள் என்ற சொல்லுக்கு முன்னோடிகள் என்றுதான் பொருள்கொள்ள வேண்டும்.
வாழ்க்கைப் பதையில் நமக்கு முன்னதாகப் பயணித்து, வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளையும் இன்ப துன்பங்களையும் நமக்கு படிப்பினையாக விட்டு சென்றவர்கள் தான் நமது முன்னோர்கள்.
வருங்கால சந்ததியினருக்குப் பாடமாகவும், வழிகாட்டியாகவும், வாழ்ந்தவர்கள் தான் முன்னோர்கள். முன்னோர்கள் சொன்னார்கள் என்று யாராவது கூறினால் யார் அந்த முன்னோர்? அவரின் வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதைக் கணக்கில் கொண்டே அவற்றை நம்பலாமா? பின்பற்றலாமா? என்பதை முடிவுச் செய்ய வேண்டும்.
