கல்லூரி வாசலில் நீ - கவிதை
இவ்வுலகில்
இரகசியம் என்றும்
அதிசயம் என்றும்
வாய்ப்பில்லாதது என்றும்
எதுவுமே கிடையாது
என்பதை – நேற்றுதான்
உணர்ந்தேன்...
அதிசயமும் ஆச்சரியமும்
மகிழ்ச்சியும் மயக்கமும்
மொத்தமாக நடந்தது
நேற்றுக் காலையில்
கல்லூரி வாசலில்
ஒரு கவிதை நடை
நீ...
