அறிவு, புத்தி மற்றும் எண்ணம், இவை மூன்றும் ஒன்றா?
அறிவு, புத்தி மற்றும் எண்ணம், இவை மூன்றும் ஒன்றா? இல்லை, இவை மூன்றும் வெவ்வேறு குணாதிசயங்களையும் தன்மைகளையும் கொண்டவை. இவை மூன்றுக்கும் சிந்தனை ஆற்றலுடன் தொடர்பிருந்தாலும், இவற்றின் சிந்திக்கும் தன்மையும் ஆழமும் வெவ்வேறானவை.
அறிவு என்பது நமது ஐம்பொறிகளின் மூலமாக உருவாகும் அனுபவப் பதிவுகளாகும்.
புத்தி என்பது நம் ஐம்பொறிகளில் மூலம் அனுபவிக்கும் விஷயங்களை சீர்தூக்கி பார்த்து சரி தப்பு என்று முடிவு எடுக்க ஆற்றலாகும்.
எண்ணம் என்பது நம் மனப்பதிவுகளில் இருந்து சுயமாக உதிக்கக்கூடிய சிந்தனைகளாகும்.
