காதலும் கவிதையும்
கவிதைகள் வடிக்கும்
தருணத்தில் எல்லாம்
உன் நினைவுகள்
உதிப்பதில்லை
உன் நினைவுகள்
உதிக்கும் தருணத்தில்
எல்லாம் கவிதைகள்
பிறப்பதில்லை
உன் நினைவுகள் கலந்து
தோன்றும் கவிதையில்
உயிரோட்டம் தெரிகிறது
கவிதையில் கவிதை
கலந்ததாலோ
முழுமைத் தெரிகிறது
